விபத்தில் பெண் சாவு

Update: 2023-05-09 19:00 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராமன். இவருடைய மனைவி சந்திரா (வயது 43). இவர், தொட்லாம்பட்டி கிராமத்தில் தனது தாயார் வீட்டுக்கு பாலக்கோடு- பாப்பாரப்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சந்திரா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திரா தர்மபுரி அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்