அந்தரநாச்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாடு, குதிரை வண்டி பந்தயம்

அந்தரநாச்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Update: 2022-08-14 18:39 GMT

மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்

அரிமளம் ஒன்றியம் மேல்நிலைப்பட்டி அந்தரநாச்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் மேல்நிலைப்பட்டி அரிமளம் சாலையில் நடைபெற்றது. இதில் பெரிய மாடு, சிறிய மாடு, குதிரை என 3 பிரிவாக போட்டி நடைபெற்றது. பெரிய மாடு போக வர 7 மைல் தூரமும், சிறிய மாடு போக வர 5 மைல் தூரமும், குதிரை போக வர 7 மைல் தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில், வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அம்பாள் கணபதி முதலிடமும், 2-வது பரிசை தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பேட்டை சகாயராணியும், 3-வது பரிசை புனவாசல் நித்திய வேம்பையனும், 4-வது பரிசை ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளையபுரம் அஜ்மல்கான் ஆகியோர் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சிறிய மாடு பிரிவில் 11 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் ஏரியூர் விஜயவேலும், 2-வது பரிசை புதுக்கோட்டை மாவட்டம் பிடாரிக்காடு மாரியம்மனும், 3-வது பரிசை சிவகங்கை மாவட்டம் முள்ளங்காடு செல்லக்கண்ணும், 4-வது பரிசை தஞ்சாவூர் மாவட்டம் பொன்காடு மாசிலாமணியும் பெற்றனர்.

குதிரை பந்தயத்தில் 16 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை நாகூர் பிரவீனும், 2-வது பரிசை கார்குடி குணாவும், 3-வது பரிசை காட்டுபுளி சவுந்தரும், 4-வது பரிசை திருச்சி மாரிஸ் ராஜாவும் பெற்றனர். இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் வேட்டி, துண்டு, குத்துவிளக்கு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்