மொபட் மீது சரக்கு வேன் மோதி தம்பதி படுகாயம்

மொபட் மீது சரக்கு வேன் மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-04-08 19:00 GMT

திருச்சி தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் செந்தில் (வயது 43). வக்கீல். இவரது மனைவி தாமரைச்செல்வி (33). இந்தநிலையில் சம்பவத்தன்று செந்தில்-தாமரைச்செல்வி ஆகியோர் ஒரு மொபட்டில் மணப்பாறை- குளித்தலை சாலையில் குளித்தலை அருகே உள்ள இரும்புதிப்பட்டி அகதிகள் முகாம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று செந்தில்-தாமரைச்செல்வி ஆகியோர் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட தம்பதி படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்