சரக்கு வாகனத்தில் நிலக்கரி கடத்தல்

நெய்வேலியில் சரக்கு வாகனத்தில் நிலக்கரி கடத்தல் தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-13 18:45 GMT

நெய்வேலி, 

நெய்வேலி என்.எல்.சி. அனல்மின்நிலையம் 2-ன் விரிவாக்கம் அருகில் உள்ள கூனங்குறிச்சி பகுதியில் மந்தாரக்குப்பம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அனல்மின்நிலைய வாய்க்காலில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் வந்த பழுப்பு நிலக்கரியை சேகரித்து, அதனை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்துடன் பழுப்பு நிலக்கரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பழுப்பு நிலக்கரி கடத்தல் தொடர்பாக மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த டிரைவரான பார்த்திபன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்