அரசு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

அரசு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-03-08 18:37 GMT

கரூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் நடைபெற உள்ள 10,11,12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரையும் நடக்கிறது. இதனால் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும், என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா உள்பட அரசு அலுவலர்கள் பலா் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்