தேசியக்குழு தலைவர் தலைமையில் ஆலோசனை

தேசியக்குழு தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-25 19:05 GMT


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா ஆவியூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இந்தநிலையில் நேற்று தேசிய ஜல்லிக்கட்டு குழு தலைவர் எஸ்.கே. மிட்டல் தலைமையில் விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருப்புக் கோட்டை கோட்டம், காரியாபட்டி வட்ட வருவாய் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை, மாவட்ட கால்நடை துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், மாடுகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாடுகளின் கொம்புகளுக்கு குப்பிகள் அணிய வேண்டும். மாடுகளின் மீது வண்ணம் பூசக் கூடாது. ஒரு வாகனத்தில் ஒரு மாடுக்கு மேல் ஏற்றி வரக்கூடாது என பல்வேறு விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்