பூதலூரில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்

பூதலூரில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்

Update: 2023-03-24 20:14 GMT

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

இதனை கண்டித்து நேற்றுமுன்தினம் பல்வேறு இடங்களில் காங்கி்ரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று ராகுல்காந்தி எம்.பி.பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பூதலூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் பூதலூரில் ெரயில் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் ெரயிலை காங்கிரசார் மறித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், பூதலூர் தெற்கு, வடக்கு வட்டார தலைவர்கள் வெங்கட்ராமன், கலைச்செல்வன், தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், மோகன்ராஜ், மாவட்ட துணைத்தலைவர் தர்மசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ெரயில் மறியலில் ஈடுபட்ட 12பேரை பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்