அண்ணன்-தம்பி இடையே மோதல்

நிலத்தகராறில் அண்ணன்-தம்பி இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2023-03-25 18:30 GMT

அறந்தாங்கி அருகே தேடாக்கி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ் (வயது 41), விவசாயி. இவருடைய தம்பி தேவராஜ் (40). இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், அண்ணன்- தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டனர். இதில், காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் வீரமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்