கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

Update: 2023-04-22 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் பானாம்பட்டை சேர்ந்த 21 வயதுடைய மாணவி, தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மாணவி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்