கோவை கார் வெடிப்பு சம்பவம்: என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று முதல் விசாரணை

கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்குகிறார்கள்.

Update: 2022-10-30 01:44 GMT

கோவை,

கோவை கோட்டைஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலை 4.10 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார். இது தொடர்பாக இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி. வந்தனா தலைமையில் அதிகாரி கள் கோவையில் முகாமிட்டு ஆரம்ப கட்ட விசாரணை மேற் கொண்டனர். மேலும் கார் வெடிப்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் தடயங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.

கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு 2 அறைகளுடன் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் 6 பேர் வந்து விசாரணைக்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டனர். மேலும் கோவை போலீசாரி டம் இருந்து அனைத்து தகவல்களையும் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கோவையில் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் விசாரணையை தொடங்குகிறார்கள். அவர்கள், கைதான 6 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிப் பது, கேரளாவுக்கு அழைத்துச்சென்று விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்