தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை அதிகரிப்பு

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை அதிகரிப்பு

Update: 2022-10-08 18:45 GMT

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 1,416 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று அதிகபட்சமாக ரூ.745-க்கும், குறைந்தபட்சமாக ரூ.405-க்கும், சராசரியாக ரூ.677-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 58 ஆயிரத்து 989-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்