தேங்காய், பாக்கு ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், பாக்கு ஏலம் நடைபெற்றது.

Update: 2023-09-15 20:45 GMT

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு, வாழைத்தார் மற்றும் தேங்காய்க்கு மறைமுக ஏலம் நடைபெற்றது. 11 விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் இருந்து 39 மூட்டை தேங்காய்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். 5 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். தேங்காய் கிலோவிற்கு ரூ.15.60 முதல் ரூ.24 வரை ஏலம் சென்றது. இதேபோல் பாக்கு ஏலத்தில் 2 விவசாயிகள் 80 கிலோ பாக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதனை 3 வியாபாரிகள் கிலோ ரூ.250 முதல் ரூ.290 வரை ஏலத்தில் வாங்கி சென்றனர். வாழைத்தார் ஏலத்தில் 3 வியாபாரிகள் பூவன், ரோபஸ்டா, கதலி என 3 வகையான 21 வாழைத்தார்களை கொண்டு வந்தனர். இதை 6 வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரி செந்தில் முருகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்