அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்காவில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

Update: 2024-09-13 02:12 GMT

சென்னை,

தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

இப்பயணத்தின்போது முதல்-அமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சிகாகோ விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். சென்னை புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமெரிக்க வாழ் தமிழர்கள் வழியனுப்பி வைத்தனர். முதல்-அமைச்சரின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிகாகோ விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் திமுக கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்