யானை மீது சந்தனகுடம் ஊர்வலம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் யானை மீது சந்தனகுடம் ஊர்வலம்

Update: 2022-08-12 20:25 GMT

மணவாளக்குறிச்சி, 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மணவாளக்குறிச்சி தேவி நன்னெறி மன்றம் சார்பில் யானை மீது சந்தனகுடம் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி கோவிலில் காலை 8 மணிக்கு அபிஷேகம், 8.30 மணிக்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு நாதஸ்வர மேளம், 1.30 மணிக்கு தருவை நடேசர் கோவிலில் இருந்து சந்தனம் எடுத்து வருதல், 2.30 மணிக்கு சந்தனம் குடங்களில் நிரப்புதல், மாலை 4.30 மணிக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து செண்டை மற்றும் நாதஸ்வர மேளத்துடன் யானை மீது சந்தனகுடம் ஊர்வலம் புறப்படுதல் போன்றவை நடந்தது. ஊர்வலம் மணவாளக்குறிச்சி பாலம், மணவாளக்குறிச்சி சந்திப்பு, பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7.45 மணிக்கு அலங்கார சிறப்பு தீபாராதனை போன்றவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேவி நன்னெறி மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்