சிம்ஹாருடவராகி அம்மனுக்கு செந்தூரம் அலங்காரம்

சிம்ஹாருடவராகி அம்மனுக்கு செந்தூரம் அலங்காரம்

Update: 2023-06-24 19:50 GMT

கும்பகோணம் அருகே பிளாஞ்சேரியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தனி சன்னதியில் சிம்ஹாருட வராகி அம்மன் அருள் பாலிக்கிறார். இங்கு ஆஷாடநவராத்திரியையொட்டி நேற்றுமுன்தினம் சிம்ஹாருட வராகி அம்மன் மாதுளம்பூ அலங்காரத்திலும், நேற்று செந்தூரம் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அரங்காவலர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

அதேபோல் அம்மாப்பேட்டை மாரவாடி தெருவில் உள்ள வீரமகா காளியம்மன் கோவிலில் சவுபாக்கிய யோக வராகி அம்மனுக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்