டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-31 17:59 GMT

அன்னவாசல்:

இலுப்பூர் அருகே ஆச்சநாயக்கன்பட்டி பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இலுப்பூர் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காடுவெட்டிகுளம் அருகே வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் கட்டக்குடி மேலகுளத்தை சேர்ந்த தர்மலிங்கம், தேராவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்