திருச்செங்கோட்டில் இருதரப்பு மோதலில் திருநங்கைகள் உள்பட 4 பேர் மீது வழக்கு

திருச்செங்கோட்டில் இருதரப்பு மோதலில் திருநங்கைகள் உள்பட 4 பேர் மீது வழக்கு

Update: 2022-07-14 16:14 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிணி (வயது 20), மேத்தா (19), பவுர்ணமிகா (21). திருநங்கைகளான இவர்கள் 3 பேரும் திருச்செங்கோடு காய்கறி மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரிகளான இறையமங்கலம் தங்கராஜ் (70), சோழசிராமணி மணி (52), வடுகப்பட்டி கந்தசாமி (58) ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தேங்காய்களை கீழே போட்டு உடைத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து தங்கராஜ் திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதேபோல் திருநங்கை ஹரிணி, தங்கராஜ் தன்னை தாக்கியதாகவும் புகார் கொடுத்தார். இந்த 2 புகார்களின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஹரிணி, மேத்தா, பவுர்ணமிகா, தங்கராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்