மதுரை எல்லீஸ் நகர் பாலத்தின் கீழ் பகுதியில் எஸ்.எஸ்.காலனி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த அழகுபாண்டி (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுபோல், அண்ணாநகர் குருவிக்காரன் சாலைபகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த சந்தானபாண்டி (23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.