ஆதிபராசக்தி கோவிலில் குத்துவிளக்கு பூஜை

ஆதிபராசக்தி கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2022-07-31 18:46 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை கடைவீதியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் 5-ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் ஐந்து முகம் விளக்கு, மஞ்சள் விநாயகர், தேங்காய், பழங்கள், புஷ்பம், மஞ்சள் அரிசி, மஞ்சள் கிழங்கு, வளையல் உள்பட பல்வேறு வகையான பூஜை பொருட்களை கொண்டு வந்தனர். தொடர்ந்து விநாயகர் பூஜை, மாங்கல்ய ஹோமம், சரஸ்வதி ஹோமம், லட்சுமி ஹோமம், குபேர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஐந்து முக விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்