தமிழகத்தில் பொம்மலாட்ட விளையாட்டை பா.ஜ.க. நடத்துகிறது - கி.வீரமணி

அ.தி.மு.க.வை பிளவாக்கி வலுவிழக்கச் செய்ய தமிழகத்தில் பொம்மலாட்ட விளையாட்டை பா.ஜ.க. நடத்துகிறது என கி.வீரமணி கூறியுள்ளார்.

Update: 2022-08-19 12:50 GMT

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மிகப்பெரிய ஆபத்து, தமிழ்நாட்டிற்கு ஏற்படவிருப்பதை அறிந்து, முற்போக்காளர் அனைவரும் ஒருங்கிணைந்து , ஒரே இலக்கோடு ஆர்.எஸ்.எஸ்.சை ஒரு போதும் காலூன்ற விடமாட்டோம் என்பதை கங்கணம் கட்டிய உறுதியாக்கிக் களம் காணத் தவறக்கூடாது.

தமிழ்நாட்டு எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை நான்கு பிளவாக்கி, நான்கையும் வலுவிழக்கச் செய்ய கோர்ட்டில் காலந்தள்ளிடும் நிலைக்கு ஆளாக்கி, ''பொம்மலாட்ட விளையாட்டை'' - அதனை இயக்கிடும் கயிறுகளை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கைகளில் வைத்திருக்கின்றன.

தி.மு.க.வும், திராவிட மாடல் ஆட்சியும் தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகளுக்குக் குறியாம் - அதில் அவர்கள் ஓய்வதாக இல்லையாம். நாமும் அம்மதவெறி நோய் விஷக்கிருமிகளை விடுவதாக இல்லை. தமிழ் மண்ணை இந்தியத் திருநாட்டை மதச்சார்பற்ற சமூகநீதி சமதர்மத்தைக் காப்பாற்ற சரித்திரம் படைக்கும் தருணம் இது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்