பூலித்தேவன் பிறந்தநாள் விழா

பூலித்தேவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-09-01 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு பாரதியார் பஸ் நிலையம் முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பூலித்தேவன் உருவப்படத்துக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோன்று, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 38- வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன் தலைமையில் பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்கள் ராஜ்குமார், முத்துமாரி, மாவட்ட பொது செயலாளர் வேல்ராஜா, நகரத் தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், கழுகுமலையில் அகில இந்திய மருது பாண்டியர் பேரவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின்பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தேவர் சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு பேரவை நிறுவன தலைவர் கண்ணன் தலைமை தாங்கி, மலர்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அங்கு அவருக்கு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கருப்பசாமி, மாவட்ட செயலாளர் குருசாமி, தென்காசி மாவட்ட தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்