உடல் பருமனாக இருந்ததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-09 18:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டியை சேர்ந்தவர் அன்னப்பராஜ். இவரது மகள் தனஸ்ரீ (வயது 16). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு வயதுக்கு மீறிய உடல்பருமன் இருந்ததால், அவருடைய தந்தை எடையை குறைக்க எண்ணெய் வாங்கி கொடுத்து உடலில் தேய்க்க கூறியதாக தெரிகிறது. இதனால் தான் உடல் பருமனாக இருந்ததால் தனஸ்ரீ வருத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது பெற்றோர் வெளியே சென்றுவிட்டனர். தனுஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதற்கிடையே அங்கு வந்த அவரது பெற்றோர் தனுஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பருமனாக இருந்ததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்