சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முன்பு மனைவியுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

Update: 2023-06-14 19:46 GMT

 சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனைவியுடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்டம் வாழப்பாடி சேஷன்சாவடி அருகே கோடிமேட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). விவசாயியான இவர் நேற்று தனது 3-வது மனைவி ராணி (55) என்பவருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அலுவலக வளாகம் அருகே சென்ற அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்ற முயன்றனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்ததுடன் தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மிரட்டல்

இதில் போலீசாரிடம் ராணி கூறுகையில், எனது கணவருக்கு என்னுடன் சேர்த்து 3 மனைவி உண்டு. முதல் மனைவியின் மகன்கள் சொத்துக்காக என்னிடம் பிரச்சினை செய்து வருகின்றனர். அவர்கள் என்னையும், கணவரையும் வீட்டைவிட்டு வெளியே செல்லுமாறு தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இதனால் மனவேதனை அடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தோம் என்றார்.

அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்