அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.42¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.42¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2023-02-11 21:27 GMT

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.42¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 1,617 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 

ரூ.42¼ லட்சம்

பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 39-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 69-க்கும் விற்பனை ஆனது. பருத்தி மொத்தம் ரூ.42 லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம் போனது. கோவை, திருப்பூர், தர்மபுரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை வாங்கி சென்றனர்.

இதேபோல் 40 மூட்டைகளில் நிலக்கடலை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 469-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 650-க்கும் என மொத்தம் ரூ.86 ஆயிரத்து 86-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்