முதியவரை தாக்கி கொலை மிரட்டல்

முதியவரை தாக்கி கொலை மிரட்டல்

Update: 2022-05-25 19:01 GMT

தொண்டி

திருவாடானை தாலுகா நீர்க்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 60). இவரது மகன் கலைஞர். இவர்கள் இருவருக்கும் சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கலைஞர் அவரது தந்தை சுப்பையாவை தாக்கினார்..இதில் சுப்பையாவிற்கு ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் கலைஞர் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகிய இருவரும் சுப்பையாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுப்பையா திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்

Tags:    

மேலும் செய்திகள்