ஜேடர்பாளையம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; சிறுவன் கைது

ஜேடர்பாளையம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; சிறுவன் கைது

Update: 2022-05-30 12:44 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தருமாறு ஜேடர்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதும், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று சிறுமியை மீட்ட போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்