சில்லரை விற்பனை பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில்லரை விற்பனை பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்

Update: 2023-10-09 18:45 GMT

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக சில்லரை விற்பனை பட்டாசு கடைகள் அமைக்க, வெடிபொருள் சட்டம் விதிகள் (2008)-ன்கீழ், உரிய ஆவணங்களுடன் 25-ந்தேதிக்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் திட்ட வரைபடம், பத்திர ஆவணங்கள், ரூ.500/-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், பான்கார்டு, ஆதார் அட்டை, ஸ்மார்ட் அட்டை, வரி ரசீது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் பெற விண்ணப்பித்தல் வேண்டும். அவ்வாறு பெறப்படும் தகுதியுடைய விண்ணப்பங்கள் மீது, நவம்பர் 5-ந்தேதிக்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்