நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.

Update: 2024-01-20 13:10 GMT

சேலம்,

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடு நடைபெறும் இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள்  மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையடுத்து சென்னையில் தொடங்கிய திமுக இளைஞரணியின் மாநாட்டு சுடரொளி ஓட்டம் இன்று சேலத்தை வந்தடைந்ததை அடுத்து சுடரை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதையடுத்து 1500 பேர் பங்கேற்ற நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்