போதைப்பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

போதைப்பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Update: 2023-03-04 18:45 GMT

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் சார்பில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் ஆரூர் கலைக்கூடம் கலைக்குழுவினர் நடத்திய போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுஅருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பாடல், இசை மற்றும் நாடகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் கபூர் மற்றும் மதுவிலக்கு போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்