சிவகங்கைக்கு 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி வருகை:நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை

சிவகங்கைக்கு 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-03-06 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கை சிவன் கோவில் அருகில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதையொட்டி அங்கு மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் கருணாகரன், செல்வமணி, கோபி, சேவியர், மற்றும் ஆர்.எம்.எல்.மாரி, தேவதாஸ் கலை பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்