தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

Update: 2023-06-21 19:00 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், கள்ளச்சாராயம், போலி மதுபானம் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், சம்பத்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வரவேற்றார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், கள்ளச்சாராய மரணங்களை கண்டித்தும், போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், பெருகிவரும் ஊழல் முறைகளை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும், இவை அனைத்துக்கும் பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், மோகன், சங்கர், கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், நீலாபுரம் செல்வம், பழனி, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, தங்கராஜ், கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, நகர நிர்வாகிகள் அம்மாவடிவேல், அறிவாளி, சுரேஷ், பார்த்திபன், வேல்முருகன், பலராமன் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் பூக்கடை ரவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்