2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒருங்கிணைந்து வெற்றி பெறும் - ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2024-09-02 00:24 GMT

தென்காசி,

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒருங்கிணைந்து உறுதியாக வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுதந்திரப்போராட்ட வீரர் பூலித்தேவரின் 309-வது பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, "வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. உறுதியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்று, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை நிறுவும்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் எடுக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்