தவறி விழுந்து அ.தி.மு.க நிர்வாகி பலி

தவறி விழுந்து அ.தி.மு.க நிர்வாகி பலி

Update: 2023-01-13 19:00 GMT


வேடசந்தூர் அருகே முத்து பழனியூரை சேர்ந்தவர் மணி (வயது 50). அ.தி.மு.க. வேடசந்தூர் மீனவர் சங்க நிர்வாகி. நேற்று முன்தினம் இவர், வேடசந்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் முத்துபழனியூருக்கு வந்து கொண்டிருந்தார். வெள்ளையகவுண்டனூர் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் எதிரே பழனிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்த கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா மேட்டுமருதூரை சேர்ந்த கார்த்திகேயன் (34) என்பவர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

இதில் 2 பேரும் கீழே விழுந்தனர். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மணி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.





Tags:    

மேலும் செய்திகள்