எறிபந்து போட்டியில் மாணவர்கள் சாதனை

மாவட்ட எறிபந்து போட்டியில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-10-30 18:45 GMT

திருவேங்கடம்:

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மாணவிகள் மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடமும், இளையோர் பிரிவில் இரண்டாம் இடமும், மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

முதலிடம் பெற்ற இரு அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் வி.பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்