பள்ளிக்கூட வேன் மோதி வாலிபர் சாவு

பள்ளிக்கூட வேன் மோதி வாலிபர் சாவு

Update: 2023-03-17 21:40 GMT

பவானி

பவானி அருகே உள்ள மேட்டுநாசுவம்பாளையம் மணக்காட்டூரை சேர்ந்தவர் சுமதி. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருடைய மகன் தருண் பிரசாத் (வயது 25). பி.எஸ்.சி.பேஷன் டிசைனர் படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தருண்பிரசாத் சில நாட்களுக்கு முன்பு புதிதாக ஒரு மொபட் வாங்கினார். அதை கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் தன்னுடைய சித்தப்பாவிடம் காட்டுவதற்காக சென்றார்.

கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த தருண்பிரசாத் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் போலீசார் தருண்பிரசாத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்று கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள காண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்கள். அப்போது ஒரு தனியார் பள்ளிக்கூட வேன் தருண்பிரசாத்தின் மொபட் மீது மோதியது தெரிந்தது.

இதையடுத்து சுமார் 4 மணி நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய பள்ளிக்கூட வேனின் டிரைவர் பெரிய குரும்பபாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை பிடித்து கைது ெசய்தார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்