எலி மருந்து தின்ற தொழிலாளி சாவு

எலி மருந்து தின்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-23 17:44 GMT

அண்டக்குளம் அருகே கடியாப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). தொழிலாளி. இவரது மனைவி மாலா. தினமும் ராஜேந்திரன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் மாலா அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராஜேந்திரன் நேற்று  எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உடையாளிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்