கிராம சபை கூட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்

கிராம சபை கூட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-22 19:21 GMT

ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி கவிதா. இவர் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட அயன்புதூர் பகுதியில் வீட்டுமனை வாங்கி உள்ளார். மேலும் அங்கு வீடு கட்டுவதற்கு கடந்த ஜனவரி மாதம் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் குண்டூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது, வந்த கவிதா வீடு கட்ட அனுமதி வழங்காததை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்