மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் சிக்கினார்

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் சிக்கினார்.

Update: 2023-04-26 20:01 GMT

களக்காடு:

சேரன்மாதேவி அருகே உள்ள கூனியூர் கீழவடக்கு தெருவை சேர்ந்தவர் சகரியா மைக்கில் ஜெபராஜ் (வயது 28). விவசாயியான இவரது மனைவிக்கு களக்காடு புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று சகரியா மைக்கில் ஜெபராஜ் குழந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் களக்காட்டிற்கு வந்தார். ஆஸ்பத்திரி அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நேசமணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மேலபத்தை கருப்பன்தோப்பு பகுதியைச் சேர்ந்த டேனியல் (27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்