நிலத்தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

நிலத்தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது

Update: 2023-08-26 20:50 GMT

மேலூர்,

மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). இவருக்கும் இவரது அண்ணன் ஆண்டிச்சாமிக்கும் (40) நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஆண்டிச்சாமி அவரது தம்பி செந்தில்குமாரை கத்தியால் குத்தினார். காயமடைந்த செந்தில்குமார் சிகிச்சைக்கு மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஆண்டிச்சாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்