வாலிபருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை மேலப்பாளையத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-08-20 20:57 GMT

நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சின்னத்துரை (வயது 28) என்பவரை நேற்று இரவில் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரையின் ஆதரவாளர்கள், பதிலுக்கு அந்த கும்பலைச் சேர்ந்தவர்களின் 3 வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். அங்கிருந்த 3 கார்களின் கண்ணாடிகளையும் உடைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரையும் அந்த கும்பல் தாக்கியதால் சில போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையில் போலீசார், சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்