இளம்பிள்ளை அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரையை சாப்பிட்டவர் சாவு

இளம்பிள்ளை அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரையை சாப்பிட்டவர் இறந்தார்.

Update: 2022-12-22 21:45 GMT

இளம்பிள்ளை:

இளம்பிள்ளை அருகே உள்ள தப்பகுட்டை கிராமம் சின்னமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). தறித்தொழிலாளி. இவர் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்த சர்க்கரை, காய்ச்சல், சளிக்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயக்கமடைந்தார். உடனே அவரது குடும்பத்தினர் மீட்டு வேம்படிதாளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் ஏன்? அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்