மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்

மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் கிராம கோவில் பூஜாரிகள் கோரிக்கை

Update: 2023-03-01 18:45 GMT

மதுக்கூர்:

மதுக்கூர் வடக்கு கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மதுக்கூர் ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய அமைப்பாளர் செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். ஒன்றிய அருள் வாக்கு பேரவை அமைப்பாளர் மணிமேகலை, ஒன்றிய இணை அமைப்பாளர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் சின்னப்ப பூஜாரி கலந்து கொண்டு பேசினார். இதில் கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வீரமுத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்