சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

Update: 2023-01-29 19:34 GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன் (வயது 20). கட்டிட தொழிலாளி இவர் அந்த பகுதியில் உள்ள 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமி பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதித்யனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தஞ்சை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதிசரணம் ஆஜராகி வந்தார். இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து ஆதித்யனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.35 ஆயிரம் நிவாரண தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்