அங்கன்வாடி மையத்தை சூறையாடிய கரடி

கோத்தகிரி அருகே அங்கன்வாடி மையத்தை சூறையாடிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-07 19:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திம்பட்டி கிராமத்திற்குள் கரடி புகுந்தது. பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் ஜன்னலை உடைத்து, உள்ளே நுழைந்தது. தொடர்ந்து அங்கிருந்த உணவு பொருட்களை தின்று, மற்ற பொருட்களை சேதப்படுத்தி சூறையாடியது. சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் தீப்பந்தம் ஏந்தி கரடியை அங்கிருந்து விரட்டினர். மேலும் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள பகுதியில் உலா வரும் கரடியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்