திருமங்கலம் அருகே தொழிலதிபர் வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை

திருமங்கலம் அருகே தொழிலதிபர் வீட்டில் 51 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2023-09-07 21:23 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே தொழிலதிபர் வீட்டில் 51 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

தொழில் அதிபர்

திருமங்கலம் குதிரைசாரிகுளம் பகுதியில் உள்ள ஜெயின்ட் விலாஸ் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது54). இவர் சித்த வைத்திய கம்பெனி வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் தொழில் சம்பந்தமாக திருப்பூர் சென்று விட்டார். இவருடைய மனைவி தனலட்சுமி, மகன் கீர்த்தி வாசன் ஆகியோர் சென்னையில் சித்தா படிக்கும் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்நிலையில் இதனையறிந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து படுக்கை அறை மற்றும் மாடிகளில் இருந்த பீரோவை உடைத்து 51 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் வேலாயுதத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். வேலாயுதம் வந்து பார்த்தபோது தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மேலும் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வீடுகளில் அடிக்கடி கொள்ளை சம்பவம் அரங்கேறி வருவதால் போலீசார் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்