ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-06-27 19:46 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் ராமசாமி (வயது 51). இவர் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மிரட்டியதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ராமசாமியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை (ெபாறுப்பு) நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து ராமசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்