பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-21 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே நெடுகுளா கிராம பகுதியில் இரவு நேரத்தில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நெடுகுளா கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள சமுதாயக்கூடம் அருகே அமர்ந்து 5 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ரவிகுமார் (வயது 60), ஷினத் (25), ரமேஷ் (46), அபிஷேக் (23), ஜீவா (36) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,800 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்