சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.40½ லட்சம்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.40½ லட்சம் கிடைத்துள்ளது.

Update: 2022-07-12 17:51 GMT

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்க, வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். மேலும் அந்த உண்டியல்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவதும் வழக்கம். அதன்படி நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்க, வெள்ளி, வெளி நாட்டு பணம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் வேல்முருகன், சரக ஆய்வாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் உள்ள 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. கோவில் உண்டியல்களில் இருந்து வருவாயாக ரூ.40 லட்சத்து 42 ஆயிரத்து 650 ரொக்கமும், 353½ கிராம் தங்கமும், 575 கிராம், 200 மில்லி கிராம் வெள்ளியும், டாலர், தினார் உள்ளிட்ட 138 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அண்பர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த ஏப்ரல் மாதம் திறந்து எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்