நன்னடத்தை விதியை மீறிய 3 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

மாத்தூரில் நன்னடத்தை விதியை மீறிய 3 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-03-30 19:00 GMT

விராலிமலை ஒன்றியம், மாத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் விக்னேஷ் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சதீஷ் (32). மாத்தூர் நாஞ்சிலார் நகரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜெயபிரகாஷ் (35). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் அவ்வப்போது சிறு சிறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அவர்கள் 3 பேரையும் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் கைது செய்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி நன்னடத்தை விதியின் கீழ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் விக்னேஷ், சதீஷ், ஜெயபிரகாஷ் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாத்தூர் ரவுண்டானா அருகே தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் மீது நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் 3 வாலிபர்களும் நன்னடத்தை விதியின்கீழ் ஜாமீனில் இருப்பது தெரியவந்த நவல்பட்டு போலீசார் இதுகுறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் 3 பேர் மீது நன்னடத்தை விதியின் கீழ் இருந்த ஜாமீனை ரத்து செய்துவிட்டு அவர்களை கைது செய்தார். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்