சரக்கு வேனில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அறந்தாங்கியில் சரக்கு வேனில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-03-19 18:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், அதில் 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சரக்கு வேனில் இருந்த அறந்தாங்கியை சேர்ந்த ராமு (வயது 28), கணபதி (58), வேன் டிரைவர் போசம்பட்டி கருப்பையா (39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும் சரக்கு வேனுடன் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்